வெயிலில் தோல் பாதிக்கப்படும்போது, வேர்க்குரு, தோல் கருத்துப்போதல், திட்டு திட்டாகத் தோல் உரிதல், சிவப்பாதல், புண்மாதிரி வருவது போன்றவைகள் ஏற்படும். அதேபோல், அதிக வியர்வை, டிஹைட்ரேஷனையும் ஏற்படுத்தும். தோல் பாதிப்பை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டால் தோல் பாதிப்புகள் ஏற்படும்.

இந்தத் தோல் பாதிப்புகள் வராமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை?

கண்டிப்பாக ‘சன்ஸ்கிரீன்’ லோஷன் போட்டுக் கொண்டுதான் வெளியில் போக வேண்டும். இதில் முக்கியமான விஷயம், இந்த லோஷனை டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன்படிதான் வாங்க வேண்டும். ஏனென்றால் லோஷனில் பலவகைகள் இருக்கின்றன. இதில் போலியும் இருக்கும். அதனால் பார்த்து வாங்குங்கள்.

வெயிலில் போவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் இந்த ‘சன்ஸ்க்ரீன்’ லோஷனை முகத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த லோஷன், நமது தோல் கறுப்பாவதையும், மற்றும் பல தோல் பாதிப்புகளையும் தடுக்கும். லோஷன் மட்டுமல்ல, நிறைய திரவ உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள் அதிகமாகச் சாப்பிட வேண்டும். காட்டன் உடைகள் அணிவது நல்லது.

சென்ஸிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த வெயிலின் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். உதாரணமாக, பொரிப் பொரியாக வருவது, தோல் சிவந்து போவது, ‘பிக்மென்டேஷன்’ என்கிற கருப்பு திட்டுக்கள் போன்றவைகள் வரலாம். அதனால் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் கை முழுவதையும் மறைக்கும் காட்டன் டாப்ஸ் போட்டுக் கொள்ளலாம். ‘சன்ஷேட்’ போல் முகத்தை மறைக்கும் தொப்பியை போட்டுக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு முகச் சுருக்கம்

இது ஏற்படுவதற்குக் காரணம், அவர்களின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதுதான். அதனால் முடிந்தவரை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாடாக வைத்துக் கொள்வது நல்லது.

தூய பாதாம் எண்ணெயை முகம், கை, கால்களில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து சோப்புக்கு பதிலாக பச்சைப்பயறு மாவைக் கொண்டு கழுவலாம். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தோலில் சுருக்கங்கள் குறையும்.

கோகோ, பட்டர் கலந்த மாய்ஸ்சுரைஸிங் க்ரீம்களை தினமும் முகம், கழுத்து, கை, கால்களில் பூசலாம். சுருக்கம் ஏற்படாது.

அதே போல முகத்தில் மங்கு ஏற்பட்டால், 4 டீஸ்பூன் கேரட் ஜூஸில், 1 டீஸ்பூன் தேன் கலந்து பஞ்சில் நனைத்து மங்கு உள்ள இடத்தில் தடவலாம். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிய பின்னர், மீண்டும் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

சர்க்கரையை அதிகப்படுத்தாத நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே முகம் சுருக்கமடையாமல் பொலிவுடன் இருக்கும்.

வியர்வை - விரும்பத்தகாத வாசனை குறைய

நமது உடலில் அபோகிரைன் மற்றும் எக்ரைன் என்று இரண்டு வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. நமக்கு வியர்க்கும்போது, முகம், கை, கால் போன்ற இடங்களில் எண்ணெய்த் தன்மையுடன் வியர்வை சுரக்காது. ஆனால் மறைவிடங்களில் எண்ணெயும், வியர்வையும் கலந்து வெளியேறும். இதனால் இந்த இடங்களில் பாக்டீரியாக்கள் அதிகமாக வளர்கிறது. வியர்வை வெளியேறும்போது இந்த பாக்டீரியாக்களின் கழிவுப் பொருட்களும் கலந்து வெளியேறுவதால், விரும்பத்தகாத வாசனை உண்டாகிறது.

ஒரு கைபிடி வேப்பிலையையும், சிறு துளி கற்பூரத்தையும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து, அந்தத் தண்ணீரில் குளித்து வந்தால் துர்நாற்றம் குறையும்.

Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M