வாதநாராயண கீரை அடை

தேவையான பொருட்கள்:  கேழ்வரகு மாவு - 2 பாகம், வாத நாராயண கீரை (ஆய்ந்தது) - 1/2 பாகம், பச்சை மிளகாய் - 4 (நறுக்கி கொள்ளவும்), நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், கடுகு, கறிவேப்பிலை, மல்லி தழை, உப்பு, எண்ணெய், பெருங்காயத்தூள் - தேவையான அளவு

செய்முறை:  வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொறிந்த உடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி பின்பு கீரையையும் சேர்த்து வதக்கி கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தேவையான அளவு நீர்விட்டு பிசைந்து உருண்டும் பதத்தில் வைக்கவும். பின்பு தோசைக்கல்லில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு உருண்டை மாவு எடுத்து அடையாக தட்டி ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு சிறுது எண்ணெய் விட்டு மறுபக்கமும் வெந்தவுடன் எடுத்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

பலன்கள்:  வாதத்தைக் குறைப்பதாலேயே இது வாத நாராயணக் கீரை ஆகும். கீரையும், கேழ்வரகில் உள்ள அதிக அளவு கால்சியமும் மூட்டு வலி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.


Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M